Thursday 20 September 2012

சுந்தரபாண்டியன்:



      சசிக்குமாரின் தயாரிப்பில் வரும் அடுத்த படம் என்பதாலும்.. அவரது சிஷ்யரே இயக்குநர் என்பதாலும் சுப்ரமணியபுரம், நாடோடிகள் போன்று எதாது வித்தியாசமான முயற்சியாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.. ஆனால் படம் பார்த்த பின்னர் இது சுப்ரமணியபுரம், நாடோடிகள் போலவே இருக்கிறதே என்று எண்ணம் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.. அதே காதல், அதே டீக்கடை வாசல், அதே நண்பர்கள், அதே துரோகம்.. அதே ரத்தம்.. என நிறைய அதே.. அதே… அதே… என்ன இங்கு வேறு நண்பர்கள் (புரோட்டா சூரியை தவிர்த்து…) வேறு காதல் (லட்சுமி மேனனுடன்..) வேறு துரோகம்…

    படத்தின் டிரைய்லரே எதிர்பார்ப்பை சற்று குறைத்துவிட்டதால் பெரிய ஏமாற்றம் ஒன்றும் இல்லை… படத்தில் ஓபனிங் சாங்க், ஹீரோவிற்கான முகஸ்துதிகள் என கமர்சியல் ஹீரோவிற்கான அத்தனை கசாடாக்களுடன் அறிமுகமாகிறார் சசிக்குமார்.. பின்பு நாடோடிகள் ஸ்டையிலில் காதலுக்கு உதவப் போய் அதில் ஏற்படும் குழப்பங்களுடன்.. சுப்ரமணியபுரம் சுவடுகளுடனான துரோகங்களும் துரத்த.. கடைசியில் என்னாகிறது என்பது க்ளைமாக்ஸ்.
    படத்திற்கு மிகப்பெரிய ப்ளஸ் நேட்டிவிட்டி.. மதுரையின் மேற்குப்பகுதிகளான உசிலம்பட்டி, கண்டமனூர் போன்றவையே கதைக்களன் என்பதால் வசனங்கள் மிக யதார்த்தமான தொனியில் வந்து விழுகிறது.. படத்திற்கு சசிக்குமார் மிகப்பெரிய ப்ளஸ்.. அந்த கதாபாத்திரத்தில் அவரைத் தவிர வேறு யாரையுமே பொருத்திப் பார்க்கமுடியவில்லை.. என்ன கதைத்தான் இவரது படங்களிலேயே அங்கொன்றும் இங்கொன்றுமாக எடுத்து பிணைக்கப்பட்டது போல் இருப்பதால் பல இடங்களில் எரிச்சலாக இருக்கிறது..

   ஆனால் சசிகுமாரின் ஸ்கீரின் ப்ரசன்ஸ், சில மேக்கிங் ஸ்டைல், ஆங்காங்கே புரோட்டா சூரி, சசிக்குமார் கூட்டணியின் காமெடி கைகொடுப்பதால் பாஸாகிறார் சுந்தரபாண்டியன்.. ரணகலமான சண்டை காட்சிகளை வெகு அநாயசமாக கையாள்வது சசிக்குமார் கூட்டணிக்கு கை வந்த கலை.. அது இந்த படத்திலும் சிறப்பாக அமைந்து இருக்கிறது.. என்ன இவர்கள் டிவிஸ்ட் என்று நினைக்கும் விசயங்கள் எல்லாம் வெளிப்படையாக தெரிவதால்.. பெரிய எதிர்பார்ப்புக்கு பதிலாக ஏமாற்றமே மிஞ்சுகிறது..

   சசிக்குமாரும் ஒரே தளத்தில் இயங்கிக் கொண்டு இருப்பது போல் தெரிகிறது. இது தொடரும் பட்சத்தில் அவர் தனக்கான ஓபனிங்கை இழக்க நேரிடும்.. பொதுவாக விஜயின் பட ஸ்டில்களை மட்டும் பார்த்து அது என்ன படம் என்று சொல்வது மிக கடினம்.. அது இனி சசிக்குமாருக்கும் பொருந்திப் போகும் ஆபத்து இருக்கிறது.. அதை புரிந்து கொண்டு அவர் தவிர்ப்பது நலம்..

    பாடல்களோடு ஒப்பிடுகையில் பிண்ணனியிசை பரவாயில்லை ரகம்.. விஜய் சேதுபதியும் அப்புகுட்டிக்கும் வித்தியாசமான கதாபாத்திரங்கள் என்றாலும் அதிலும் தங்களது திறமை வெளிப்படுத்தி இருக்கின்றனர். லட்சுமி மேனன் கவனிக்கப்பட வேண்டிய அறிமுகம்… மற்றபடி படத்தில் சொல்லிக் கொள்ள பெரிதாக ஒன்றும் இல்லை.. எதைப் பற்றியும் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் ஒரு இரண்டரை மணி நேரம் பொழுது போக வேண்டும் என்று நினைத்து வருபவர்களுக்கு சுந்தரபாண்டியன் நல்ல சாய்ஸ்.. சுந்தரபாண்டியன் சில நாட்கள் ஓடுவார்.. அதுவும் சசிகுமாருக்காக மட்டும்…

No comments:

Post a Comment